வெள்ளி, 27 செப்டம்பர், 2013

பஜ்ஜி - 39 பெரியாரின் இந்துத் திருமணமப் பதிவு / A paradox



முகநூலில் வந்த இத்தகவல் (கீழே) என்னை ஒரு முக்கிய விவாதத்தை உருவாக்கக் கோரியது, இருந்தும் எனது வலைப்பூவில் பதிவதே வீணாய் வம்பிழுப்பவரிடம் இருந்து தப்பிக்கும் வழி, அதைத் தாண்டி வருபவர்கள் என் விருந்தினர்கள் என்பதால்...... :) தான் பதில்.... ஒகே... இனி சீரியஸ்...

******************************************************************************


முகநூல் தகவல்:-

பெரியார் ஈ. வே. ரா அவர்கள் திருமதி. மணியம்மாள் அவர்களைத் திருமணம் செய்து கொண்டது, இந்து திருமணச் சட்டத்தின்படிதான். பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று,பதிவாளர் முன்னர்தான்! இந்து திருமணச் சட்டப்படி ஒருவர் பதிவாளர் முன் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், தான் ஒரு இந்து என்று உறுதி கூற வேண்டும்

பெரியார் ஈ. வே. ரா. இந்து மதத்தில் நம்பிக்கையில்லாதவர்; அதை வெறுத்தவர்; அதை வேரோடு அழித்தொழிக்கத் தம் வாழ்நாள் முழுவதும் இயக்கம் நடத்தியவர். ஆனால், சொத்துக்காக வாரிசு தேட (அவர் சொன்னபடி) திருமணம்செய்து கொண்டபோது, “நான் ஒரு பகுத்தறிவு இந்து” என்று பதிவாளர் முன்பு உறுதி கூறினார். அதன் பின்னர்தான் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

ம.பொ.சிவஞானம்
*அகநாழிகை பதிப்பக வெளியீடாக விரைவில் வரவிருக்கும்
‘தமிழர் திருமணம்‘ என்ற நூலிலிருந்து...

******************************************************************************

விவாதம் இப்படி எழுந்தது //ஊருக்கெல்லாம் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தவர், சொத்தைக் காப்பாற்ற பகுத்தறிவு இந்து என்று சொல்லி இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்கிறார்.. //
அவர் செய்த சமூக விஞ்ஞானப் பரிட்சைகளாகவே (காந்தியின் சோதனைகளைப் போல) அத்திருமணங்களை பார்க்க இடமிருப்பதாக தோன்றினாலும், அது முக்கியமான மாற்றங்களை ஒரு சமூக அடையாளங்களில் இருந்து ஒரு குடும்பத்தை மீட்டெடுக்கும் ஒரு புதிய மரபை உருவாக்கும் பணியாக அது பெரும் வெற்றி பெற்றிருக்கக்கூடும்.. ஆனால் இந்தத் திருமணம் அதை தடுத்திருக்குமா என்றொரு விவாதம்....
ஆனால் இந்த விவாதத்தில் இன்னுமொரு முக்கிய சொல்லை மட்டும் தேர்ந்தெடுத்து அதன் வாயிலாக பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை மீது விவாதம் செய்ய விரும்புகிறேன்.

அந்தச் சொல் “நான் ஒரு பகுத்தறிவு-இந்து”. இந்த நிலையிலும், மற்ற மதத்தினைத் தழுவிய சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிக்கும் போது அவர்கள் மீது கடவுள் மறுப்புக் கொள்கையினை தினிக்காது (ஒரு இயக்கத்தில் சுதந்திரம் என்றாலும், கட்டுப்பாடு என்றாலும் எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும், பெரியார் வழி வந்தவர்கள் வலியுறுத்தியதோ “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” எனும் மந்திரங்களாக மாறிய நிலை இருக்க) ஒரு SECULAR மாதிரிச் சமூகத்தை உருவாக்க முயன்றார்.

நான் பெரியாரிடம் மட்டுமல்ல அல்ல பெரியாரிசம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட பகுத்தறிவுவாதத்தில் ஏற்க முடியாத முக்கிய விஷயமாக இருப்பது... அது இடமளிக்கும் கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் ஸ்திரமின்மையை சுட்டிக் காட்ட முயல்கிறேன்...

பகுத்தறிவு நிலையில் மனிதன் ஒரு Ape Turned Human என்ற வாதத்தை டார்வினை, பரிணாமக் கொள்கையினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை..அப்படி ஏற்றுக் கொண்டிருந்தால் அது உண்மையான ஒரு Athiestகளுக்கான அமைப்பாக உருவெடுத்திருக்கும் சாத்தியம் இருந்தது, அவர் சிறுபான்மையினரை ஆதரிக்கிறார் என்பது Political Advantage. அதே சமயம் ஒட்டுமொத்த மத நிறுவனங்களையும் பாரபட்சமின்றி எதிர்த்திருந்தால் அது வெறும் ஒரு சமூக,அரசியல் அமைப்பாக மட்டுமின்றி, ஒரு பெரிய Masonic lodgeகளைப் போல வலிமையுள்ள அறிவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் எனப் பெருகி மிக வலிமையான் அமைப்பாக மாறியிருக்கும்.


 ஆனால் அதை தனி ஒரு தலைவனாக மட்டும் செய்ய முடியாது என்பதும் உண்மை, மேற்கில் உதயமான கம்யுனிசம் ஹெகல்,ஏங்கல்ஸ் என்பவர்களுடன் விவாதிக்கப்பட்டு மார்க்ஸ் அதை வலிமையாக போதித்தார்(கடவுள் மறுப்பை),அது ஒரு அடியுரமாக உலகின் வலிமையான சித்தாந்தங்களுல் ஒன்றாக உருவெடுத்தது.... ஆனால் லெனின், ஸ்டாலின் என்ற பிரதிகள் மதங்களுக்கான Spaceஇனை அரசியல் லாபமாகப் பார்த்துக் கொடுத்திருந்தன.. அதற்கு ஒப்ப நிலை தான்..பெரியாரிடமும்..... இன்றைய பெரியாரிசம் பேசும் பரவலான பகுத்தறிவுவாதிகள் மிகவும் வெளியே வந்து விட்டனர்..... இந்த Campன் tent சரியான இடத்தில் அமைக்க முடியவில்லை என்பது தெரிகிறது...

ஒரு மிகப் பெரிய சமூக மாற்றத்தினை கனவு கண்டிருந்த அந்த இயக்கம் அந்த பாதையில் பயணிக்கவில்லை.... அதனாலேயே இதை மேலும் ஒரு pseudo secular குழுவாகத் தான் நான் பார்க்கிறேன்.. அம்பேதகரை வழிகாட்டிக் கொண்டு தலித்தியம் பேசும் வலது சாரி இயக்கங்களோடு தான் இவர்கள் மறுபுறமாக இருக்கும் நாணயம் தானே தவிர, இவர்கள் நிரையைச் சமன் செய்ய வந்த மற்றொரு நாணயமாக இருக்க வில்லை.. ஆக இந்த நாணயங்களை வைத்துக் கொண்டு எந்த வித MODERN CIVIL SOCIETYக்கான மாற்றத்தினை விலைக்கு வாங்க முடியாது....


*பெரியாரை நீ எப்படி விசாரனை செய்யலாம்””என்றோ, ”மார்க்ஸை நீ எப்படி கேள்வி கேட்கலாம்” என்றோ சொல்லாதீர்கள்!!..பதிலினையோ, விவாதத்தினையோ மட்டும் செய்யுங்கள்.. மாறாக கண்டித்தாலோஅல்லது தாக்கி பேசினாலோ நீங்கள் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் நிறுவ இருப்பதும் ஒரு மதம் தான், அங்கே உங்கள் கடவுளாக உங்கள் தலைவர் இருக்கிறார் - பகுத்தறிவின் சமாதியில் நின்றபடி..
(மிகச் சுருக்கமாக எழுத இணையம் நிறைய இடம் கொடுக்கிறது, அதனால் விரிவாக விவாதிக்கவும் நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன...........)
அதுவரை பெரியாரின் இந்துத் திருமணப் பதிவினை ஒரு முரணாகப் பார்க்கிறேன்..... Astrology, Time Travel Paradox மாதிரி....இங்கே நிறைய புனைவுகளுக்கும் சாத்தியம் இருப்பதால் இதை இப்படி dilute செய்ய கிடைக்கும் வெளியைப் பயன்படுத்தி..

முரண் களின் அழகியல் ததும்புகிறது 
அவை கலைகள் ஆகட்டும் -            என்று கூறி விடை பெறுகின்றேன்.




 -ஜீவ.கரிகாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக