சனி, 7 செப்டம்பர், 2013

வராக மண்டபம்: ஈகோவும், எகோவும். - மகாபலிபுரம் -07

வராக மண்டபத்து ஈகோவும், எகோவும்

மகாபலிபுரம் 07- பஜ்ஜி சொஜ்ஜி - 35


இது முழுமையாக சிற்பங்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் என்று நான் எழுத ஆரம்பிக்கவில்லை. சிற்பங்கள் பேசும் மொழியினை, அதன் பின் புலக் கதையினை, சிற்பத்தின் மனநிலையை, அதை நவீனச் சூழலுக்கு ஏற்ப ஒரு சாமாண்யன்யனால் அனுகக்கூடிய வாய்ப்புகளைப் பற்றியே இதுவரை தேடியிருக்கிறோம். இந்தச் சிற்பங்களின் வாயிலாக வரலாற்றில் நடந்திருக்கும் ஏதேனும் ஒரு பிழை அல்லது தவறு என முடிவுக்கு வரும் SPACEஐக் கூட அதே சிற்பங்கள் தான் தருகிறதே.. அது தான் வரலாற்றின் தன்மையே அது சார்பற்றது, அதை எந்தத் திசையில் இருந்தும் பார்ப்பதற்கு அதை அனுமதிக்கும். இவ்வாறே புராணங்களை வரலாற்றை அணுகும் விதம் போல நெருங்கினால் எந்த தீங்கும் இல்லை.

 யுத்தம் என்பது உலகின் எங்கோ ஒரு புள்ளியில் நடந்து கொண்டே தான் இருக்கின்றது, 300 -400 ஆண்டுகளுக்கு முன்பு Super power நாடுகளாக இருந்த இந்திய/சீன நாடுகளில் ஒவ்வொரு பிராந்தியமும் போர்ச் சூழல் கொண்டதாகவே இருந்து வந்தன, இன்றைய சூப்பர் பவர்களான அமெரிக்க மற்றும் ரஷ்யா அதைத் தான் செய்துக் கொண்டிருக்கின்றன. நாகர்கள் மீதான தெய்வங்களின் தொடர்ந்த யுத்த கணக்குகள் கூட, அதை சிற்பங்கள்/புராணங்கள் வாயிலாகக் காட்டிய கலைஞர்களின் முயற்சியில் தான் சாத்தியமாகிறது, இந்த கலைப் பதிவுகளே!! இப்புராணங்களுக்கும், கலைப் படைப்புகளுக்கும் எதிரான அரசியலை முன் வைக்கும் இடத்தையும் தாமாகத் திட்டமிட்டே தருகின்றன.

வராக மண்டப்த்தின் நாற்புறத்திலும் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து வெளியே வர முடியாமல், இன்னும் சில நேரம் அங்கு தங்க வைக்க மற்றுமொரு விசயம் இருக்கிறது, அதற்கு நீங்கள் அன்னாந்துப் பார்க்க  வேண்டும். அட!! இது சாதாரண ஸ்ரீசக்ரம் தானே என்று சொல்லலாம், அது தான் சரி, வாயில் வழியாக சென்றதும் அர்த்த மண்டபத்தின் கூரையில் செதுக்கப் பட்டிருக்கும் மூன்று தாமரைகள் (விரிந்த நிலையில் இருக்குமாறு Bird's iye viewல்), பக்தி மார்கத்தின் ஸ்ரீசக்ரமான இவற்றின் வண்ணங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழியும் நிலையில் இருக்கின்றது, காவி வண்ணம் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்கு கீழ் நின்று நீங்கள் சப்தமிட்டால், அதன் ரிங்கார எதிரொலிதான் இந்த மண்டபத்தின் மற்றுமொரு சிறப்பு, வெவ்வேறு இசை கேட்கும் வகையான தூண்கள் எல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்டது தான். ஆனால் இதில் சாதாரன எதிரொலியாக அல்லாமல், ஒரு சங்கு அல்லது இரண்டு மணி ஓசைகளுக்கு இடையே ஆன ஒரு ரிங்காரம்(இது கூட சரியான பதமா என்று தெரியவில்லை). அதன் ஓசை நமது அசையின் மாத்திரை நீளத்தை விட மிக அதிக நேரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் சரியான Syllable(அசை)யினை மிகச் சரியாக சொல்ல வேண்டும்.

நான் ஒரு பத்து பதினைந்து முறை, வெவ்வேறு இடங்களில் இருந்து எதிரொலி கேட்டேன், “ஓம்” என்பது மிக முக்கியமான அசை என்பதை மறுக்க முடியுமா.. நான் இப்படி கத்திக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு guide-உடன் வந்திருந்த ஒரு கொரிய நாட்டவன், என்ன Mantra சொல்ல வேண்டும் என்றான், "Whatever the syllable you like?" என்றேன். வெறும் “ம்” என்றான். அது“ம்ம்ம்ம்ம்”  என்று எவ்வளவு நேரம் ஒலித்துக் கொண்டே இருந்தது!!??.அவன் சென்ற பின்னர், மீண்டும் தனித்தே முயற்சித்துக் கொண்டிருந்தேன். மற்றொரு வடநாட்டவனும் என்னிடம் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என்று விசாரித்தான், சொன்னேன். அவ்வளவு தான் ஆவணி அவிட்டம் போல காயத்ரி மந்திரம் சொல்லிப் பார்த்தான், ஒரு ஓசையும் திருப்பிக் கேட்கவில்லை.

ஒரு எதிரொலியும் கேட்காததால் -என்னைப் பார்த்தான். “you are looking for the idol not his voice”என்றேன், சிரித்தான். மறுபடியும் ”ஓம்” என்று மட்டும் சொல்லிப் பார்த்திருக்கலாம், after-all மறுபடியும் ஒரு முன் பின் தெரியாத மனிதனிடம் தோல்வியடைவதா என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.  There is no place for Echo when Ego exists.

ஆனால் இந்த வடநாட்டவனுக்கு மட்டுமல்ல, என்னுடன் வந்த மொத்த குடும்பத்திற்கும் இது கிடைக்கவில்லை. என்னுடன் என் தங்கை மட்டும் சித்தி மட்டும் மீண்டும் மீண்டும் அதைக் கேட்டு ரசித்தோம். உண்மையில் என் குடும்பத்தினர் போல பலருக்கு அதில் நாட்டமில்லையா அல்லது அதில் அதிசயப்படுவதற்கோ அல்லது ஆச்சரியப் படுவதற்கோ ஏதுமில்லை என்று நினைக்கிறார்களா?? தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் தான் சரியென்றால் எனக்கு இது மேலும் ஒரு fiction..

ஆனால் நான் சொல்வதும் சரிதான், cymatics பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறிர்களா? ஒளி வடியம் போன்று ஒலியின் வடிவத்தை அறிவது, உண்மையில் முதன் முதலில் இது உணரும் (திறணாக)பயிர்ச்சியாக இருந்தது, இன்றைய நவீன அறிவியல் தான் இதை அறியும் திறனாக மாற்றியிருக்கிறது. சமஸ்கிருதத்தின் அக்‌ஷரம், நமது மொழியின் அசை என்ற அலகுக்கு ஒத்தானது.

ஓம், ஸ்ரீ போன்ற எல்லா அக்‌ஷரங்களுக்கும் ஒரு வடிவம் இருக்கிறது. இன்றைய அறிவிலறிஞர்கள் இந்த ஓம் எனும் அசையின் வடிவமாக இந்த ஸ்ரீயந்திரத்தின் வடிவத்தைக் காட்டுகின்றனர். இணையத் தரவுகளிலே நாமும் இதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம், இதற்கான மென்பொருளான டோனோ ஸ்கோப்பினை தரவிரக்கம் செய்து நாமும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

அந்த ஸ்ரீயந்திரம், சக்கரம் அல்லது தாமரை எனப்படும் வேலைப்பாட்டிற்கு கீழே நின்று ஓம் என்று கூறினால் உங்களால் மிக துல்லியமாக ஒரு ரிங்கார எதிரொலியைக் கேட்க முடியும், அதை யார் செய்தாலும் கேட்க முடியும். இந்த கலைப் படைப்பு யாரையும் பாகுபடுத்திப் பார்க்கவில்லை, நமக்கு தான் நம்பிக்கை இல்லை, ஓற்றுமை இல்லை, அன்பு இல்லை, பொறுமை இல்லை, சந்தோஷம் இல்லை , தேடல் இல்லை - பின்னர் வாய்ப்புகள் இருந்தும் கொடுப்பினை இல்லை.

அடுத்த பதிவில் கொஞ்சம் மலையேறுவோம் மகிஷாசுரமர்த்தினி காத்துக் கொண்டிருக்கிறாள்.

தொடரும்

ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக