வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

அசுரன் ஆளும் உலகு - 03 (All seeing eye - Aadhar card)


தகவல்கள் கடத்தப் படும் பாதை - ஆதார் கார்டு



{முழுத் தொடரையும் வாசிக்க இங்கே சுட்டவும் (கீழிருந்து வாசிக்கவும்)}

சென்ற பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவில், சி.ஐ .ஏ-வுக்கும் ஆதார் அட்டைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் போது  இதன் (UIDAI) தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்  முன்னாள் இன்பொசிஸ் தலைவர் நந்தன் நில்கெனி. அவர் தலைமையில் நாடு முழுவதும் இந்தத் திட்டத்தினை அமுல் படுத்துவதற்கும் , செயல் படுத்தி, கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இந்த வேலைகளை சில நிறுவனங்களிடம் ஒப்படைத்தார்.

அந்த நிறுவனங்களில் முக்கியமானவை மஹிந்திரா-சத்யம் , அக்சென்சர் மற்றும் ஹெச்.பி  நிறுவனங்கள் தான் பிரதானம், இந்த நிறுவனங்கள் தமது தொழில்நுட்பப் பங்குதாரர்களாக முறையே, Morpho,  Mindtree மற்றும்  L1 Solutions (4G identity) ஆகிய வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களோடு கூட்டு வைத்திருந்தது தெரிய வந்தது.

 L1 solutions, இந்த நிறுவனத்தின் வரலாற்றைப் பார்த்தோமேயானால்: 2006ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆஃப்கன் மற்றும் ஈராக் போரின் போது அந்நாட்டு மக்களின் மொத்த தகவல்களையும் தமது நாட்டின் பாதுகாப்பிற்காக சேமித்து வைக்க முடிவு செய்தது, இது போன்று திரட்டப் படும் தகவல்கள் அந்நாட்டிற்கு வரும்  ஆபத்தான் ஊடுறுவல் மற்றும் சதிச்செயல்கள் நிகழ்ந்திருப்பின் அல்லாது நிகழா வண்ணம் பாதுகாப்பதற்கு உதவக்கூடும் என்று உறுதியாக நம்பியது. அதன் விளைவாக இந்த் (bio-metric)உயிரியளவு அடையாளப்படுத்தும் (identification) முறை சரியான தொழில்நுட்பமாகக் கருதியது, L1 solutions இந்த நேரத்தில் மிகப் பெரிய அளவில் இந்த வேலையைச் செய்து தரும் இந்தப் பணியை பெற்றிருந்தது.

George Tenet, முன்னாள் CIAவின் மூத்த அதிகாரி, ஈராக் போரின் போது நிறைய ஊழல் புகாரால் குற்றம் சுமத்தப் பட்டவர், ஒரு வருடம் இந்நிறுவனத்தின் இயக்கனராக இருந்திருக்கிறார். அதற்குப் பின்னர் தான் L1 Solutions நிறுவனத்திற்கு ஈராக், ஆஃப்கன் மற்றும் அமெரிக்காவின் சிவில் அடையாள அட்டைக்கான பெரிய பெரிய தொழில் வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. வலைதளங்களில் தேடினாலே கிடைக்கின்றன, L1 solutions மற்றும் அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பைப் பற்றிய செய்திகள் எளிதாகக் கிடைக்கின்றன. அப்படித் தான் இந்திய நிறுவனமான சத்யம் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவிலும் தன் காலைப் பதித்தது இந்நிறுவனம்.

இந்தியா மட்டுமல்லாது, சீனாவிலும் தேசிய குடிமகன்களுக்கான் அடையாள அட்டை வழங்கும் பணியில் பெருவாரியான சதவீதத்தை பெற்றுக்கொண்டது இந்நிறுவனம். மார்ஃபோ எனும் நிறுவனம் L1 solutions நிறுவனத்தின் பங்குகளை வாங்கி தன்னோடு இணைத்த பின்னர் சாஃப்ரான் குழுமம் எனப்படும் மார்ஃபோ அறக்கட்டளை, உலக அளவில் தன் கிளை நிறுவனங்கள் மூலம் பெற்ற தரவுகளை ஒருங்கிணைத்தது. இதன் மூலம் உலகம் முழுமைக்கும் மிக முக்கியமான ஆவனமாக இந்த தரவுகள் ஒரே சர்வருக்குள் தகவல்களாக சேமிக்கப் பட்டன. லத்தீன் -அமெரிக்க, சீனா, இந்தியா, அரேபியா, வளைகுடா என பல நாடுகளின் மொத்த குடிமகன்களாக அந்தத் தரவுகள் இருக்கும் என்பது மற்றும் உறுதி.

உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஸ்நோடென் பற்றிய செய்தி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, அமெரிக்கப் புலனாய்வு ஏஜன்சியில் பார்த்து வந்த வேலையில் தெரிந்து கொண்ட தகவல்களின் படி பார்த்தால், அமெரிக்க மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் மற்ற நாடுகளின் டெலிபோன் ஒட்டுக் கேட்பு, இணையம் வாயிலாக தகவல்கள் திரட்டுதல் என மிக ஆபத்தான விளைவுகளைத் தரும் அளவிற்கு சேகரித்துள்ளது. அசட்டையான நமது இந்திய அரசின் செயல்பாடுகளில் இருந்து வரும் பல ஓட்டைகளில் ஒன்று தான் இந்த் ஆதார் கார்டு.

இதுவரை எப்படி இந்த தகவல்கள் திருட்டினால் ஏற்பட இருக்கும் ஆபத்துகள் குறித்துப் பார்த்தோம், இதற்கு முன்னர் நம் நாட்டிற்குள்ளேயே இந்த அட்டைகள் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தும் என்று பார்த்து விடுவோம்.


- ஜீவ கரிகாலன்





2 கருத்துகள்:

  1. பயனுள்ள ,அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்..

    பதிலளிநீக்கு
  2. Collecting information about Bio-Metrics and citizen's person individual data might lead to complete privacy violation which will (not may or might) lead to handing over all the controls to anyone who possess the data... By analyzing the patterns of financial data transformation is not only a security violation but also a major concern needs to be taken care.

    பதிலளிநீக்கு