செவ்வாய், 9 ஜூலை, 2013

பஜ்ஜி சொஜ்ஜி - 24 // சிங்கம் -04 (இலங்கையில் இந்திய அரசு)

       

 இலங்கையில் இந்திய அரசு
 -- A film by Ministry of External Affairs India


கொஞ்ச நாள் இடைவெளி விட்டிருக்கோமே எழுதும்போது ஏதாவது நல்ல விஷயமா எழுதலாம்னு உட்கார்ந்தா??? தாங்க முடியாத அளவு மூட் அவுட்.
ஏன் என்னாச்சு??>>>

நம் நாட்டில் எத்தனை பேருக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இருக்கு என்பது தெரியும்?? மத்திய அமைச்சகம் என்றால் நமக்கெல்லாம் என்ன தெரியும் ?? 1.பாஸ்போர்ட் கொடுக்கும் Authority . 2. ஒரு சிங், குஜராத்தி அல்லது மலையாளி மீனவன் என்று யாராவது வேறு நாட்டு கடல் எல்லைக்குள் சிக்கிக் கொண்டாலோ அல்லது பிரச்சினையில் மாட்டிக் கொண்டாலோ ஒருவர் வந்து போவார் ஒரு வயதானவர். 3. நம்ம ஊர்க் காரங்க யாராவது அரபு, மலேசியா போன்ற தேசத்தில் அடிமைகளாகவோ, கைதிகளாகவோ சிக்கிக் கொண்டால் உடனே கலை நிகழ்ச்சிகளை பார்க்க அயல் நாட்டிற்குக் கிளம்பும் ஒரு நிபுணரைக் கொண்ட குழு தான் அமைச்சரகம். 4. இது போக த்ம்முடன் வரும் IAS அதிகாரிகளுக்குப் பதிலாக பண முதலைகளையும், பன்னாட்டு நிறுவன அதிபர்களோடும் செல்லும் பாலிஸி ஏஜண்ட்கள் என்றெல்லாம் அவர்களைச் சாடுவதால் நமக்கு ஒன்றும் நிகழ்ந்து விடப் போவதில்லை.

இன்றைய நிலையில் ஈழப் படுகொலை - காங்கிரஸ் எனும் தேசியக் கட்சியை தமிழகத்தின் எல்லா தொகுதிகளிலும் விரட்டிவிடுவது என்பது உறுதி. இணையம் வாயிலாக பல பிரச்சாரங்கள் செய்து பார்த்தும் சோர்ந்து விட்டது.  அவ்வப்பொழுது பெஙக்ளூரில் வைத்து ஆயுத பயிற்சி கொடுக்கும் நம் ராணுவம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். இன்று தனித் தனி அணியாக பல்வேறு இயக்கங்கள் ஈழ இனப் படுகொலை பற்றி பேசினாலும், அண்டை மாநிலங்களில் இது பற்றிய பதிவு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று கொண்டுதான் இருக்கிறது.

காங்கிரஸ் செய்து வந்த எல்லா துரோகங்களையும் மீடியாக்கள் துணை புரிந்தன அது தமிழக வரலாற்றுப் பதிவில் ஒரு முக்கிய நிகழ்வான மாணவர்களின் போராட்டத்தையும் இருட்டடிப்பு செய்தது, சமூக வலை தளங்களைத் தவிர. சிங்களனை இந்திய வம்சாவளியாகக் காட்டியும் தமிழகத்தை தனிமைப் படுத்தியது. இதற்கு நம்முடன் வாழும் துரோகிகளும் உடன் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பது வேறு விஷயம். ஆனால் தமிழகத்தின் பிரதிநிதிகளாக எந்த இயக்கங்களிலிருந்து (தமிழக பா.ஜ.கவாக இருந்தாலும் கூட) குரல் வந்தாலும் அதனை அலட்சியம் செய்ய மற்ற மாநில மக்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம். அந்த விருப்பத்தின் காரணமாக மத்திய அரசின் மூளையில் உதித்த அடுத்த திட்டம் தான் ஆவனப் படம்.


இந்திய வெளியுறவு அமைச்சகம் இலங்கையில் செய்ததாகக் காட்டும் மறுசீரமைப்புப் பணிகளைப் பற்றிய ஆவனப் படம் தற்பொழுது (தமிழில்) பொதிகை தொலைகாட்சியில் ஒலி பரப்பப்பட்டுள்ளது. இது அநேகமாக திரையரங்குகளிலும் ஒளிபரப்பப் படலாம்.ஆவனப் படத்தின் இறுதியில் Thank you Govt of India என்று ஒரு ஈழச் சிறுவன் கடற்கரை மணலில் எழுதி வைப்பது போல் காட்சி முடிகிறது.

மிக மோசமான பொய்ப் பிரச்சாரம் மூலம் ஓட்டு வங்கியை குறிவைத்து (இலங்கையிலும் வேறு தேர்தல்!!) எடுக்கப் பட்டுள்ள படம் இது..

நாம் அனைவரும் முட்டாள்களல்ல இந்த படத்தினைப் பார்த்து நம்பிட, அதே சமயம் இந்த பொய்யாவணப் படத்திற்கு எதிரான பிரச்சாரமும் தொடங்க வேண்டும் என்பதும் அவசியம்..

மிக மோசமான பொய்ப் பிரச்சாரம் மூலம் ஓட்டு வங்கியை குறிவைத்து (இலங்கையிலும் வேறு தேர்தல்!!) எடுக்கப் பட்டுள்ள படம் இது.நாம் அனைவரும் முட்டாள்களல்ல இந்த படத்தினைப் பார்த்து நம்பிட, அதே சமயம் இந்த பொய்யாவணப் படத்திற்கு எதிரான பிரச்சாரமும் தொடங்க வேண்டும் என்பதும் அவசியம்.மிக மோசமான பொய்ப் பிரச்சாரம் மூலம் ஓட்டு வங்கியை குறிவைத்து (இலங்கையிலும் வேறு தேர்தல்!!) எடுக்கப் பட்டுள்ள படம் இது..

நாம் அனைவரும் முட்டாள்களல்ல இந்த படத்தினைப் பார்த்து நம்பிட, அதே சமயம் இந்த பொய்யாவணப் படத்திற்கு எதிரான பிரச்சாரமும் தொடங்க வேண்டும் என்பதும் அவசியம்..

இந்த சுட்டியை அழுத்தவும் http://www.youtube.com/watch?v=WMHie_vc_aQ

ஜூலை 08-09 ல் தேசிய பாதுகாபு அலோசகர் செய்த இலங்கை விஜயத்தின் பயணக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.
http://www.mea.gov.in/press-releases.htm?dtl/21921/National+Security+Advisers+visit+to+Srilanka

இந்தக் குறிப்புகளில் பார்த்தீர்களாயின் இலங்கையில் வட பகுதியில் ஏற்ப்பட்டுள்ள சீரழிவை வெறும் Internal Conflict என்று காட்டி இனப்படுகொலை என்பதை கான்க்ரீட் போட்டு மறைக்கிறது. ராமநாதபுரத்தில் வரவேண்டிய ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தொழிற் மையத்தை இலங்கைகு தத்துக் கொடுத்திருப்பதாக தன் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

இனப்படுகொலைக்குப் பின்னே நடத்தும் இது போன்ற ஈனச் செயல்கள், நம் நாட்டின் தேசிய சின்னமான மூன்று சிங்கங்களின் பின்னே மறைந்திருக்கும் சிங்கத்தின் சாயலை  அந்தக் கார்டூன் ஓவியமாகவே சித்தரித்துக் காட்டுகிறது.

//The National Security Adviser conveyed to the Sri Lankan leadership the Government of India’s views on the recent political developments and called for early political settlement and national reconciliation through the meaningful devolution of power so to ensure that all citizens of Sri Lanka, including the Sri Lankan Tamil community, would lead a life marked by equality, justice, dignity and self-respect.In this context, he also emphasized the need for adhering to the commitments made by the Sri Lankan Government to India and the International Community on a political settlement in Sri Lanka that would go beyond the 13th Amendment. He also expressed the hope that elections to the Northern Provincial Council would be held in a free, fair and credible manner.//

இந்த பிரச்சாரத்தை நாம் எப்படி எதிர்கொள்(ல்ல)ளப் போகின்றோம், அந்த ஆவனப் படத்தின் கீழ் ஒரு கண்டனமாக நம் கருத்தை இடுவது குறைந்தபட்ச செயலாக்கம்.



(தொடரும்)
ஜீவ.கரிகாலன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக