ஞாயிறு, 28 ஜூலை, 2013

பஜ்ஜி - சொஜ்ஜி- 27 #பகடி - 01 / துபாய் to டோங்ரி -விமர்சனம்

(இது தொடர்ந்து இயங்கும் தமிழ் முகநூல் பதிவர்களுக்கானது....)

  துபாய் to டோங்ரி -விமர்சனம் (100% இலக்கியம்)

இந்தக் கதையில் இரண்டு நபர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களாக காண்பிக்கப்படுகிறது. முதலாமவர் நல்ல செல்வாக்கு மிகுந்த, படித்த,  பெருமதிப்புடைய, நம் சமூகத்தில் ஒரு முக்கியமான நபர் என்ற தோற்றமும் பரவலாக இருக்கிறது. ஆகவே அவர் தானே கதாநாயகனாக இருக்க வேண்டும். இரண்டாம் நபர் தன் முகம் காட்டும் பொழுது, மிகவும் வன்மமாகஆபாசமாக சித்தரிக்கப்படுகிறது. வன்மம், ஆபாசம்,மிரட்டல் என மிகத் தீவிரமாக அவர் செயல்படுகிறார், முதலாமவரிடத்தில் ஏமாந்து வந்த பல நபர் இரண்டாமவரோடு சேர்ந்து கொள்கிறார்கள்.

இப்படிச் சேர்ந்து கொண்ட கூட்டங்களைக் கண்டு வெறுப்படையும் முதலாம் நபர் தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டத்தையும் நம்பப் பிடிக்காமல் அவர்களைத் துரத்திவிட்டு புதிய நட்பு  அரண் ஒன்றை அமைக்கிறார். அவர்கள் வெறும் அரணாக மட்டுமில்லாமல் அதன் மீதேறி அம்பை எய்கின்றனர். மறுபுறமும் இருந்து அம்பு வருகிறது. முதலாம் நபர் துரத்திய நபர்கள், இரண்டாமவரையும் சேராமல் வெறுமனே வேடிக்கை பார்த்து வருகின்றனர். சில அம்புகள் அப்படி வேடிக்கை பார்ப்பவர்களது மூக்கை அறுத்து விடவும் செய்கின்றன.

இதை திடீரென்று போர் நடக்கின்றது என்று ஒரு முரசு அறிவிக்கின்றது, இருபுறமும் உள்ளவர்கள் ஆமால்லஎன்று உச்கொட்டி, பின்னர் தங்களை போர் வீரர்கள் என்று அறிவித்துக் கொள்கின்றனர்.அது போன்ற போர் உலகம் அதுவரை சந்தித்திராதது. திடீரென்று சில் அம்புகள் சம்பந்தமே இல்லாத வண்ணத்தில் அவர்களுக்கு குறுக்கேயும் கூட சென்று, வந்து கொண்டிருந்தது.

இந்த போர நடக்கும் காட்சிக்கு மேலே ஒரே புறாக்களின் கூட்டம், கால்களில் செய்திகளைச் சுமந்தபடி, இப்படிப் பறக்க ஆரம்பித்த சற்றை நாட்களிலேயே புறாக்கள் கொழுத்து விடுகின்றன, இருந்தும் அப்புறாக்களை அந்த இரண்டு பிரதான நபர்களும் கூரைக்கு சென்றாவது விட்டெரிந்து பறக்க வைக்கின்றனர். இதில் பல காலமாய் பாழ் நிலம் உழுது வந்த வேளாளர்கள், கோமணம் கட்டிக் கொண்டு அந்த ஊரில் நடக்கும் போரை வேடிக்கை பார்த்துக் களிப்புடன் இருக்க ஆரம்பித்தனர், ச்ற்றைக்கெல்லாம் அண்டை ஊருக்கும் தெரிய வர, நானும் வேளாளன் தான், நானும் போர் வீரன் தான் என்றபடி ஊருக்கும் வர ஆரம்பித்தனர், இந்த அஞ்சல் புறாவை வாடகைக்கு கொடுக்கும் பணக்கார கம்பெனிகள் கூட அந்த போர்க்கலத்தைப் பார்க்க கூட்டம் வருகிறது என்று தெரிந்து கொண்டு நிறைய நிறைய மிளகா பஜ்ஜி, பானி பூரி, பஞ்சு மிட்டய், டெல்லி அப்பளக் கடைகளை ஸ்டால் வைத்தது அங்கே இரண்டு மூன்று ராட்டிணம் கூட இருந்தது. ஆனால் பொதுக் கழிப்பிடம் தான் இல்லவே இல்லை. எல்லாருமே அதற்காகக் கவலைப் படவில்லை, அதே சமயம் எல்லோரும் நல்லபடி தின்று, கழித்து வாழ்ந்தார்கள். அவ்விருவர்களும் சண்டையை நிறுத்த் விரும்பினால், அருகில் இருக்கும் தளபதிகளே அவர்களை காலி செய்து விடும் அளவுக்கு போர் உக்கிரமானது.

அந்த நல்ல பிரபலம், கெட்டவர் போலாவும். அந்த கெட்ட மனிதர் உத்தமர் போலவும் , அடுத்த நாளே... ( ஆங்.... அது என்ன சொல்வார்கள்???? ஹா கிடைத்துவிட்டது சொல்கிறேன்...அடுத்த நாளே அதற்கு வைஸ் வெர்சாவாகவும் நிறைய ட்விஸ்டுகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருக்கின்றன.

அப்பொழுது , அங்கே ஒரு டாணாக் காரரும் வந்து சேர்ந்தார். அவரிடம் ஒரு குண்டுச் சிறுவன் பஞ்சு மிட்டாய் ஒன்று வாங்கிக் கொடுத்தபடி, இன்னொன்றை கடித்தபடியே அவரிடம் ஒன்று கேட்டான்,  “என்ன ஆச்சு அங்கிள்??, நீங்க ஏதுவுமே அவுங்கள பண்ணலையா??” என்று, அதற்கு அவர் தன்னை சிறந்த அதிகாரியாக கைகளைக் கட்டியபடி, தன் கால் முன் பாதத்தை ஊன்றி தரையில் வைத்துக் கொண்டு  உரத்த குரலில் சொன்னார்.
 “தம்பி....!!! இது ஒரு அண்டர் வேர்ல்ட் வார் (Under World War), இந்த தாதாக்கள் அவுங்களுக்குள்ளாகவே சண்டை போட்டு அவுங்களாகவே ஆஃப் ஆயிடுவாங்க நாம் ஒண்ணுமே செய்யத் தேவையில்லை” என்றார். அப்பொழுது இந்தக் கதைக்கே சம்பந்தமில்லாத ஒரு ராஜாளிப் பருந்து பறந்து சென்றது..


இது துபாய் டூ டோங்கிரி என்று வந்த, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆங்கில புத்தகத்திற்கு, கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் நான் எழுதிய புத்தக விமர்சனம்.



ஹி ஹி ஹி
தொடர்வேனுங்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக