சனி, 5 ஜனவரி, 2013

பஜ்ஜி-சொஜ்ஜி (10) - 2013

2012 எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டு

இது வரை 8 கட்டுரைகள் வெளி வந்துள்ளன, இரண்டு புத்தக விமர்சனம், இரண்டு மொழி பெயர்ப்பு கட்டுரை, ஒரு சிறுகதை ஆகியன வெளி வந்துள்ளன.

அதையும் தாண்டி நான் மகிழ்வுறக் காரணம் முகநூலில் நான் பெற்ற சிறத்த நட்புகள் தான். அந்த நட்பு கொடுத்த வடிவம் தான் www.yaavarum.com. தொடர்ந்து ஐந்து நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியது மிகவும் நிறைவாக இருக்கிறது கவிஞர் ஐயப்ப மாதவன் கொடுத்த உற்சாகம் தான் என் கையிலும் ஒரு பேனாவை கணையாழியாக மாற்றும் நிலை. நண்பர்களாக சாத்தப்பன் அவர்களும்,அன்பு சிவன் அவர்களும் தலை அசைக்காவிட்டால் இந்த இணையம் தொடங்கப் பட்டிருக்காது. நண்பர் ரமேஷ் அவர்களின் உழைப்பு( எந்த பிரதிபலனும் எதிர்பாராது) இந்த கனவை நனவாக்கியது. அது போல கண்ணதாசனும், இளம்பிறை பாலாவும் கூடுதல் பலமாக அமைந்துவிட்டனர். இப்போதைக்கு எல்லா சுமைகளையும் தாங்கியபடி navigate செய்யும் மாலுமியாக ஒரு உயர்ந்த மனிதன் வேல் கண்ணன் இருப்பது பயணத்தை சுமூகமாகக் கொண்டுச் செல்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் எப்பொழுது கவிஞர் ஐயப்ப மாதவன் கைகளுக்கு மைக் வரும் என்று ஆவலாக நாங்கள் எதிர் பார்ப்பது போல் 2013ல் யாவரும்.காம் செய்யவிருக்கும் பயணம் குறித்து ஆவலாக இருக்கிறது. ஈழக் கவிஞரின் புத்தகத்தை விமர்சனம் செய்யும் நிகழ்வு மூலம் கடல் தாண்டியும் தமிழ் நெஞ்சங்களை இணைக்கும் இணையமாக இதை நிறுவுவதில் ஒரு மகிழ்ச்சி.

தொடர்ந்து எங்கள் நிகழ்வுகளுக்கு வருகை தந்து ஊக்கமளித்து வரும் கவிஞர் யவனிகா ஸ்ரீராம், இயக்குனர் சூரியதாஸ், கவிஞர் கனேச குமாரன், விசுவநாதன் கனேசன், ஸ்ரீதர் கதிர் பாரதி, பாலசுப்ரமணியன், கவின் மலர், நிலா ரசிகன், மழைக் காதலன், ரமேஷ் மற்றும் பலருடன் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, யாவரும்.காமிற்கு வருகை புரியும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றி.

இது போக இந்த வருடம் ஆரம்பிக்கும் வேளையிலே எனக்கு வந்த இரட்டிப்பு சந்தோஷம், வெவ்வேறு சிற்றிதழ்களில் என் இரு வேறு கட்டுரைகள் வெளி வரவிருக்கிறது என்கிற சந்தோசம் தான். வலைப்பூவிலும் இந்த வருடம் மட்டும் ஏழாயிரத்திற்கும் அதிகமான பேர் வருகை புரிந்துள்ளனர்கள். குறிப்பாக இது பஜ்ஜி-சொஜ்ஜியின் விளைவாக நேர்ந்தது என்பது மிகையல்ல. ஒரு கட்டுரையாளராக, வலைபதிவராக இந்த பஜ்ஜி-சொஜ்ஜி தொடருடன், சீனா தானா என்ற சீரியஸ் தொடர் ஒன்றையும் எழுத ஆரம்பிக்க (நாள், நட்சத்திரம்) பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பஜ்ஜி-சொஜ்ஜியில் ஏன் இன்னும் FDI பற்றி அதிகமாக பேசுகிறாய் அது தான் முடிந்து போன விஷயம் ஆயிற்றே என்ற ஒரு நண்பருக்கும் இங்கு பதில் சொல்கிறேன். செய்தித் தாள்களைப் போல் டாப் பிரியாரிட்டி கொடுத்து எழுத வேண்டிய கட்டாயம் எனக்கில்லை என்றாலும், இன்னும் ஒரு வருடம் முழுக்க எழுதினாலும் அதன் பின்னால் உள்ள அரசியல் நிறையவே தோண்டப் படாமல் இருக்கும் என்பதால் தான் இதை பற்றி எழுதுகிறேன். இதை ஒரு yard stick ஆக வைத்துக் கொண்டு கூட பல பிரச்சனைகளில், அரசின் கொள்கைகள், திட்டங்கள் போன்றவற்றை விவாதிக்க முடியும்.

உதாரனமாக, சில்லறை வணிகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு இன்று பல மனிதர்கள் தாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் மீதான பார்வையை மாற்றியுள்ளது, இதை சிலர் சமூகவலைதளங்களில் புத்தாண்டு தீர்மாணமாக அந்நியப் பொருட்களின் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற நிலைச்செய்திகளில் வாயிலாக உணர முடிந்தது. அது வெகு சிலரிடம் தான் என்றாலும் வரவேற்கப் பட வேண்டிய மாற்றமே. மொத்த வணிகம், அந்நியப் பொருட்கள், தரமான உள்நாட்டு சந்தைப் பொருட்கள், தேவையான அளவு மட்டும் நுகர்தல், ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தல் என்று தனிமனித நடவடிக்கை சார்ந்த மாற்றங்கள் ஆங்காங்கே துளிர்விடுகின்றன.

நானும் எழுத வேண்டியதற்காக எழுதாமல் ஒவ்வொன்றாக சுய பரிச்சயத்தை அடிப்படையாக வைத்து எழுதவதைத் தீர்மானமாகக் கொண்டுள்ளதால், டாபர் (ரெட்) டூத் பேஸ்ட், மைசூர் சேண்டல், பவண்டோ என்று மாறினாலும், பெப்சி-கோக், ஜீன்ஸ் பாண்ட் (தேவையற்ற நுகர்வு) போன்ற சமாச்சாரங்களை சில காலமாய் தவிர்த்து வருகிறேன். ஆனால் இதைக் கொண்டு சில முடிவுகளுக்கு வந்துவிடமுடியாது என்பதால் நேரடீயாக இந்த பட்டியலைப் பற்றி பேச இன்னும் தொடர்கள் சில பாக்கியிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு, எனக்கு ஊக்கமளித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும், வருகை புரிந்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

- அடுத்த பகிர்வில்
இன்னும் சுவையாக
பஜ்ஜி -சொஜ்ஜி


ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக