ஞாயிறு, 25 நவம்பர், 2012

பஜ்ஜி –சொஜ்ஜி -07




     தொடர்ந்து தம் அடித்துக் கொண்டிருப்பவர்கள் என்றாவது ஒரு நாள் திடிரென்று தனது புகைப் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் பொழுது இது தான் கடைசி சிகரெட் என்று சொல்லி கடைசிப் பஞ்சு வரை இழுத்து குடிப்பார்கள், அவர்கள் கண்டிப்பாக தன் பழக்கத்தை மறுபடியும் தொடர்வார்கள் என்று சொல்லலாம். அதுபோலத் தான் நானும், மறுபடியும் டயட் இருக்கவேண்டும் என்று சங்கல்பம் எடுக்கும் நாளில் எல்லாம் வெளுத்துக் கட்டிவிடுவேன். இன்றும் அப்படித் தான் கடைசியாக அடையார் ஆனந்த பவன் சென்று வேண்டுமென்பதை வாங்கி தின்னும் முடிவுடன் உள்ளே சென்றேன்

      ஏற்கனவே சில்லி பரோட்டா சாப்பிடும் பொழுது பல்லில் ஸ்டேப்லர் பின் மாட்டிக் கொண்ட சம்பவம் நடந்து ஆறு மாதம் தான் ஆகிறது, சில நாட்கள் முன்னர் சென்ட்ரல் ஸ்டேசன் சரவண பவன் பிரியாணி சாப்பிட்டு மனதைப் பறிகொடுத்ததால், முதலில் பிரியாணியிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று பில்லிங் கியூவில் நிற்கும் பொழுது அலுவலகத்திற்கு பெர்மிஷன் போட்டு செல்லும் ரேசன் கடை கியூவாக கண் முன்னே வந்து நின்றது. ஞாயிறு மதியம் வந்து தினமும் நம் வீட்டில் கிடைக்கும் சாதாரண சவுத் இண்டியன் மீல்ஸை வாங்கி உண்ணும் குடும்ப நண்பர்களை பார்க்கும் பொழுது ஆச்சரியமும், கவலையும் ஒரு சேர வந்தது. 
ஆச்சரியம் அந்த அளவிற்கு ஒரு சாதாரண சாம்பார், ரசம் சாப்பிடக் கூட இத்தனை பணம் செலவழிக்க நாம் மாறிவிட்டோமா? சமையல் அந்த அளவு வெறுக்கும் கலையாக போய்விட்டதா? சோம்பல் பெருகி விட்டதா?; 
கவலை ஒருவேளை ருசிக்காகத்தான் வருகிறது இந்தக் கூட்டம் என்றால், நம் பாரம்பரிய சமையல் அந்த அளவு அருகிவிட்டதா?? 

     இதற்கிடையில் பில்லிங் கியூ, டெலிவரி கியூவெல்லாம் தாண்டி திரைப்படங்களில் வரும் ஜெயில் கைதி போல் அள்ளி வைத்த 85 ரூபாய் (உனக்கு இது வேணும்) பிரியாணியை வாயில் வைக்கும் கணம் என் முகம் மலர்ந்து(?) பிடித்த அபிநயங்களும், முத்ராக்களும் சொல்லின “என் அம்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி இனி உன் சமையலில் இனி குறை சொல்ல மாட்டேன்” என்று சத்தியம் செய்வேன் . எதிர் டேபிளில் இதே முகத்துடன் என்னோடு சேர்ந்து கியூவில் சண்டை (*01) போட்டு தயிர் சாதம் வாங்கியவரின் முகம் அதே அஷ்ட கோணலுடன்..கவனியுங்கள் அது வெறும் தயிர் சாதம் தான்..

***************************************************************************
        தயிர் என்றவுடன் தான் ஞாபகம் வருகிறது, தயிர், பால் போன்ற நம் தினசரி உணவில் முக்கிய இடம் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைய பாக்கெட் பாலோ, தயிரோ தன் நிலை திரியாமலே கெட்டு விடுகிறது. இதை எல்லோரும் கவனித்திருக்கலாம், அதாவது பாலோ, தயிரோ கெட்டுவிட்டால் ஏற்படும் நிறமாற்றம்  வருவதில்லை, ஆனால் உட்கொள்ளும் போது தான் வித்தியாசம் தெரிகிறது. ஏன் இந்த நிலைஎன்று அலசிப் பார்க்கும் போது தான் சில விபரீதங்கள் தெரிய வருகிறது.
 
தீவிரமாக பதப்படுத்தும் செயல்முறைகளில் என்னென்ன ரசாயனக் கலப்படங்கள் நிகழ்கின்றன என்று ஒரு பட்டியல் எடுத்தேன் தலை சுற்றியது. செயற்கை முறையில் உருவாக்கிய பகுதிப்பொருட்கள் (components) இந்த வெண்ணை நீக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட பாலில் இருக்கின்றன அவை யாவும் ஒன்று பதப்படுத்தும் முறையிலோ அல்லது பசுக்களின் வழியாகவோ கலந்து இத்தகைய கொடிய உணவாக பாலை மாற்றிவிட்டன. ஆண்டிபயோடிக் மருந்து, அளவிற்கு அதிகமான இரத்த அணுக்கள் (சாதாரணமாக 1 லிட்டர் பாலில் 15 லட்சம் வெள்ளை அணுக்கள் வரை இருக்கும்), இரைப்பை-குடலுக்குரிய புரதக் கூறுகளில் இருக்கும் கலப்படம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட rBGH, மற்றும் பாலுடன் கலக்கும் சீழில் இருக்கும் அணுக்களின் அபிரிதமான எண்ணிக்கை. என்ன வியப்பாக இருக்கிறதா? அதிகமாக பால் கறப்பதற்காக மரபணு மாற்றம் செய்தும், விஷேச உணவு வகைகளும்(*02) உருவாக்கிய மாடுகளில் சுரக்கும் பாலில் இருக்கும் அதிகப்படியான சீழ் செல்களின் எண்ணிக்கை என உரைய வைக்கிறது அந்த பட்டியல்.

மாஸ்டிடிஸ் எனும் நோய் மாடுகளுக்கு வருகிறது, அதுவும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பால் மாடுகளின் உணவாலும், இயந்திரம் கொண்டு அதீதமாக கறப்பதாலும் அவற்றிற்கு நம்பமுடியாத அளவிற்கு அழற்சி நோய் இருக்கிறது. அதன் காம்புகள் சிவந்து, வீங்கி, சீழ் படியும் நிலை. அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலோடு கலந்து வரும் சீழ் தடை செய்யப் படவில்லை (நம் அரசின் guideline count எத்தனை என்று தெரியாது).அதிகப் பாலிற்காக மாடுகளைப் சித்ரவதைப்படுத்துவது, பசுவை உணவுக்காகக் கொல்வதைக் காட்டிலும் கொடியது!  இந்த மாதிரியான பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால் புற்று நோய் வரை இட்டுச் செல்லும் என்றால், வேறு நோய்களைப் பற்றிய பட்டியல் அவசியமே இல்லாதது.

நீங்களே யோசியுங்கள் நூறு நாட்கள் கெடாத பால் என்று விளம்பரப் படுத்துகிறார்களே!! நூறு நாட்கள் கெடாமல் இருப்பது பால் தான ஐயா!!?? “ நிறைய பால் குடி, தோனி மாதிரி வருவ என்று யாராவது சொன்னால் இனி நம்பாதீர்கள் (பாலும் சரி தோனியும் சரி), இனி வரும் தொடர்களில் பால், பசு மாடு பற்றி இன்னும் சொல்கிறேன்.

*********************************************************************

 இந்த லிங்கை சொடுக்கவும்
http://in.news.yahoo.com/three-iim-indore-students-expelled-consuming-drugs-hostel-183000586.html

ஒரு உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆண்டு தோறும் படிக்கும் சில நூறு மாணவர்களில்  இத்தகைய நடத்தையுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?? ஒரு மேலாண்மை உயர்கல்வி படிக்கும் ஒருவன் போதைக்கு அடிமையாகிறான் என்றால் உண்மையில் கல்வி என்பது என்ன?? அதுசரி ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்ய மதுக்கடை வைத்து பிழைப்பு செய்யும் அரசுகள் நம்மிடம் இருக்கையில் இதனால் என்ன பெரிய தீங்கு என்ன கேள்வி எழும்??


*01 இப்போதெல்லாம் நம் ஊர் ஹோட்டலில் கூட தமிழில் ஆர்டர் செய்ய முடிவதில்லை, அங்கெல்லாம் வட இந்தியர்கள் இருப்பதால் உணவு சரியில்லை, தாமதமாகிறது என்று என்ன சொன்னாலும் “பெப்பேஎன்று தலையாட்டி விட்டு செல்கிறார்கள்.
*02 கரவை மாடுகளுக்கு என்று விஷேசமாக கொடுக்கப் படும் தீவனம் கூட ஒரு பெரிய உணவுச் சங்கிலியை அறுக்கின்றது வெறும் பொருளாதார லாபங்களுக்காக


இன்னும் சூடாக, சுவையாக தருகிறேன் வாசிப்பவர்கள் யாரேனும் விமர்சனம் செய்யுங்கப்பா!!
ஜீவ.கரிகாலன்


2 கருத்துகள்:

  1. முன்பு எனக்கு நானே யோசித்துக் கொள்வேன்: "பசுவை சாப்பிடுபவர்களுக்கு மட்டும் ஏன் பிரமஹத்தி தோஷம் வரவேண்டும்? பசுவின் இரத்தமான பசும் பால் குடிப்பவர்களுக்கும் தானே வர வேண்டும்.." என்று!

    இன்று புரிகிறது முன்னோர் சொன்ன பிரமஹத்தி தோஷத்தின் இன்றைய வடிவங்கள்!! :)

    பதிலளிநீக்கு
  2. Pajji Sojji Soodo soodu... Arumaiyana Korvai anna... :) :) :)

    Pasuvai kadavuluku nigaraga mariyathai seithu vittu, Idhu pondra Keeltharamana Seyalkalai seivathu Migavum Asingamanathu... This is Next level of BULLSHIT...

    பதிலளிநீக்கு