செவ்வாய், 14 மே, 2013

பஜ்ஜி சொஜ்ஜி - 19 செல்லரித்துப் போன நான்காம் தூண்



நாட்டைப் பற்றிப் பேசும் பொழுது, எப்பொழுதும் அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் குற்றம் சொல்லிப் பழகிய மனதுக்கு கடைசி நம்பிக்கை என்று நினைத்துக் கொண்டிருந்த மீடியாக்கள் மீதுள்ள என் கோபம் தான் இந்த பதிவு.

முதன் முதலில் பிரஸ் மீட் ஒன்றை நேரில் பார்க்கப் போகிறோம், அதுவும் நம் சொந்த மண்ணின் பிரச்சனை என்பதால் முன்கூட்டியே சென்னை பிரஸ் கிளப் வளாகத்திற்கு சென்று விட்டேன். தூத்துக்குடியிலிருந்து ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான 32 பேர் அடங்கிய குழுவொன்று NTCE (National Trust of Clean Environment) சார்பாக வந்திருந்தது. அதில் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், உடல்நலம் பாதித்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என வந்திருந்தனர். முதலில் பிரஸ் மீட்டாக ஒன்றரை மணி நேரமும், அதன் பின்னே தனித்தனியாக வெவ்வேறு பேட்டியெடுத்து முடித்தனர். மொத்தம் 31/2 மணி நேரம் இருக்கும் புதிய தலைமுறை, NDTV, AAJ THAK, கலைஞர், ஜெயா, தந்தி, வின், கேப்டன், தூர்தர்ஷன் என அனைத்து முன்னணி ஊடகங்களும், ஹிந்து, குரோனிகல் போன்ற நாளிதழ்களின் நிருபர்களும் பேட்டி எடுத்தனர்.

கிட்டதட்ட 2400க்கும் மேற்பட்ட கேன்சர் நோயாளிகள் ஒரு நகர எல்லைக்குள் ஒரு வருடத்தில் (ஒரே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட தகல் உரிமை ஆவனம்) உருவாகியுள்ளனர் என்ற தகவலில் கூட அவர்களுக்கு செய்தி இல்லாமல் போய் விட்டதோ என்னவோ இந்த மூன்று நாட்களில் அந்த பிரஸ் மீட் பற்றிய ஒரு செய்தியும் வரவில்லை.

ஏற்கனவே அரசு அமைத்த ஆய்வுக்குழுவில் அங்கத்தினராக இருக்கும் ஆலையின் அதிபர் அனில் அகர்வால், டெல்லிக்கு மாற்றப்பட்டிருக்கும் வழக்கினை தன் பக்கத்திற்கு மாற்றி விடுவது உறுதி, அதற்கு உதவி செய்தார் போல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையிலும் மாசுபடுதல் குறைந்திருப்பதற்கான ஆவனம் சமர்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த செய்தி மட்டும் அனேக ஊடகங்களில் வெளிவந்து விட்டன.

ஒரு ஆர்வலர் கூறினார், ஸ்டெரிலைட் ஆலை வேண்டாம் என்று கையெழுத்து வாங்க வேண்டி பொது மக்களிடம் கையெழுத்து கேட்க செல்லும் பொழுது அம்மக்கள் சொன்னார்களாம், “போன வாரம் ஆலையை மூடக் கூடாதுன்னு கையெழுத்துப் போடச் சொல்லி நூறு ரூபா கொடுத்தாக, இப்போ நீங்க எவ்வளவு கொடுப்பீக”என்று. நானும் அதைத் தான் கேட்கிறேன் “மீடியாக் காரர்களே!! நீங்கள் அந்தச் செய்தியைப் போடாமல் இருக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்”.

உங்க உளுத்தம் பருப்பு மீடியாக்கள விட இணையங்களும், சமூக வலைதளங்களும் ஆயிரம் மடங்கு மேல்



- ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக