ஞாயிறு, 9 டிசம்பர், 2012

பஜ்ஜி-சொஜ்ஜி -08/ அந்நிய முதலீட்டில் அரசியல் கேளிக்கை

  இந்தப் பகுதியில் அந்நிய முதலீடு பற்றிய சில அம்சங்களை எழுதுகிறேன்
நன்றி : முகநூல் நண்பர்கள்

      
பாராளுமன்றம்# செயல்பாடு#பொறுப்பு  :
            முலாயம் சிங் யாதவ், மாயவதி, மு.கருணாநிதி போன்ற பல நல்ல உள்ளங்களின் சந்தர்ப்பவாத உதவியால் இன்று அந்நிய முதலீடு சில்லரை வர்த்தகத்தில் நுழைய இருந்த தடைகள் யாவும் அகன்றது. உண்மையைச் சொல்லப் போனால் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை நுழைப்பதைக் காட்டிலும் FEMA சட்ட திருத்தமே மிகப் பெரிய தலைவலியாக இருந்து வந்தது, ஏனென்றால் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு தான். உண்மையில் எந்த ஒரு பெரிய மீடியாவிலும் இந்த சட்டத்தைப் பற்றி செய்தி வரவில்லை. அதாவது ஷர்மா என்ற நபர் தொடர்ந்த வழக்கில் FEMA  வில் சட்ட திருத்தம் இல்லாத பொழுது அந்நிய முதலீடு இருப்பதை அனுமதிக்க முடியாது என்று கோரிக்கை வைத்திருந்தார். இது அடிப்படையில் மிகப் பலமான சிக்கல் உடையது இப்பொது இருக்கும் FEMA(Foreign Exchange Management   Act ) அழுத்தமாக சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்து வந்தது (RBI guidelines).இதைப் பற்றி பெரிதாக வெகுஜன மற்றும் செய்தி ஊடகங்களே அலட்டிக் கொள்ளாமல் இருக்க, FDI யோடு சேர்த்து FEMA திருத்த மசோதாவும் நிறைவேறியாகிவிட்டது. 

                 இந்த திருத்தம் குறித்து முதலில்(ஜீரோ ஹவரில் ) எழும்பிய கேள்விகள் விவாதத்தில் FDIல் மட்டுமே கவனம் செலுத்தியதால், FEMA திருத்தம் குறித்த எதிர்ப்பை பிரதான எதிர்கட்சியே கூடுமானவரை விவாதிக்கவில்லை என்பது கடந்த வார பாராளுமன்ற நடவடிக்கைகளை அலசிப் (இணையம் வாயிலாக) பார்த்ததில் புரிகிறது (நிற்க -இவ்விடத்தில் மாற்றுக் கருத்து இருந்தால் உடனேயே தெரிவிக்குமாறு விண்ணப்பிக்கிறேன்). இதில் என்ன முக்கியம் என்றால் BJP, CPI எழுப்பிய கேள்விகளும் அதற்கு ப.சி அளித்த பதிலும் :
தேதி : December 06 - 0 hour : இந்த திருத்தம் இப்போதுள்ள சூழலுக்கு கொண்டு வரவேண்டிய அவசியத்தை நிதியமைச்சர் ஒரு அறிக்கை தர வேண்டும் என்கிற வாதம் வலுவாக வைக்கப் பட்டது, அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், “ இதைப் பற்றிய விளக்கம் கண்டிப்பாக அளிக்கப்படும் ஆனால்
அதற்கு சிறிது காலம் வேண்டும்என்று முற்றுப் புள்ளி வைத்தார்.

           ஆனால் அடுத்த நாளே நிறைவேறிவிட்டது சட்ட திருத்தம், இனி யாருக்கு தேவை அந்த அறிக்கை??. சாதாரணமாக மொக்கை மசாலா படங்களுக்கு கூட லாஜிக் இல்லை சரியில்லை என்றால் படம் குப்பை என்று சொல்லும் நமக்கு, இது போன்ற நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சட்ட திருத்தங்களைப் பற்றி போதிய அளவு விவாதங்கள் கூட நடத்தாமல் சட்ட திருத்தம் மேற் கொள்ளும் லாஜிக்கில்லா அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது தான் நமது நிலை தான் பரிதாபகரமாக தோன்றுகிறது.

சட்டம்# பலவீனம்#விளையாட்டு:

              FEMA சட்டம் பற்றி பேசும் முன் அதன் வரலாறு தெரிந்து கொள்வோம் 1999ல் கொண்டு வந்த FEMAக்கு முன் இருந்த FERA (Foreign Exchange Regulatory Act) உலகமயமாக்கலுக்கு எதிராக இருந்து வந்தது. அதை மாற்றும் போது கிளம்பிய பெரும் எதிர்ப்பிற்கு பதிலாக நமது சிறு உற்பத்தியாளார்கள், வணிகர்கள் என பாதுகாப்பை உறுதி செய்த சட்டப் பிரிவு தான் இது. இப்போது பாருங்கள் மத்திய அரசின் சூது விளையாட்டை : 
1.    FEMA சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடை செய்கிறது.
2. மத்திய அரசின் அமைச்சர் குழு அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறது,
      ஆனால் சட்டப்படி அதற்கு RBI ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம்
  இருக்கிறது. 
3.  FEMA-வின் சட்டப்படி அந்நிய முதலீட்டை அனுமதிக்க RBI n ஒப்புதல் தேவை
4. FEMA பிரிவு 47  மற்றும் பிரிவு 6 (3(B))ன் படி, RBI -FEMA வில் சட்ட திருத்தம் ஏதும்
  செய்வதற்கு அதிகாரம் கொடுக்கப் படவில்லை
5. ஆனால் தேவையான மாற்றத்தை RBI கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு
   FEMA பிரிவு 48ன் படி மத்திய அரசின் இரண்டு அவைகளிலும் (ராஜ்ய/லோக்)
   ஒப்புதல் பெற வேண்டும்  
6. ஆக கடைசியாக வேண்டுவதெல்லாம் FEMA திருத்தம் இரண்டு அவைகளிலும்
   ஒப்புதல் பெற வேண்டியது தான்.
இதற்கான விவாதத்தில் தான் நிதியமைச்சர்ஹோம்வொர்க் செய்தேன் வீட்டில் நோட்டை வைத்து விட்டேன்என்பது போல் அறிக்கையக் கொடுத்திட நேரம் தேவை என்று சாக்கு சொல்லிவிட்டு, தேர்விலும் பாஸாகிவிட்டார். இது நமது அந்நிய முதலீட்டுக் கொள்கையில் அடிப்படையை மாற்றியமைக்கத் தேவைப்படும் முக்கியமான சட்டதிருத்தம்... வாழ்க ஜனநாயகம்.

தேசியப் பிரச்சினை#சமூகப் பிரச்சினை#குறுகிய அளவீடுகள்:

இது நம் காலத்தில் மிகப் பெரிய அளவில் தேசம் சந்தித்துள்ள அரசியல் பிரச்சனை என்பதை மறுக்க முடியாது. இதில் பல்வேறு வகையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் (அரசியல் ஆதாயங்கள் போன்றவற்றையும் தாண்டி கம்யுனிஸ்டுகளும், BJPயும் ஒன்றாக நின்ற இடம்), எதிர்ப்புகளை மூன்று வகையாக பிரிக்கலாம் பொருளாதார ஆதாயம் (காங்கிரஸ் தலைவர்கள் ??? , தொழிலதிபர்கள், பங்கு வர்த்தகர்கள் ??), அரசியல் ஆதாயம் (கலைஞர், முலாயம் சிங், மாயவதி), சமூக ஆதாயம் (!!!).



(இதில் சமூக ஆதாயம் என்ற அளவில் தான் மிக முக்கியமான பிரச்சினை வருகிறது. இதையும், இதை எதிர்த்தவர்கள் இனி எப்படி இருக்க வேண்டும் என்கிற விஷயங்களை கண்டிப்பாக அடுத்த பகுதியில் சொல்கிறேன்)

அது வரை
Happy Reading

ஜீவ.கரிகாலன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக