வியாழன், 22 மார்ச், 2012

நமக்குள் என்ன இருக்கிறது ?

மெல்லிய தென்றலில்
என் தலை மேல் விழும்
பூக்களின் ஸ்பரிசமும் ;
அரிதாய் பெய்யும்
குளிர் மழையின் ஈரமும்
நீ தந்த ஒற்றை முத்தத்தை
ஞாபகமிட்டுக் கொண்டே
இருக்கிறது!!

கனவுகளில் என் கை விரல் பற்றும் நீ
விழித்த பின்பும் விடுவதே இல்லை !!
காற்றாய் வந்து என்னை கட்டி அணைக்கும்
மாயக் கரங்கள் மருதாணி வாசம் தருகிறது !!

என்னை ஏற்றுக் கொண்ட நாளிலேயே
என் ஆன்மாவில் கலந்துவிட்ட
உன்னை- என் கனவுகளில் இருந்தும்
என் கனவுகளை- என்னில் இருந்தும்
பிரிக்க முடிவதில்லை!!

நித்தமும் என்னைத் தழுவிடவும்,
முத்தமிடவும், ஊடல் கொள்ளவும்
தவறாத நீ !!
நம்முடன் யாரையும் அனுமதிப்பதில்லை!!

இருந்தும் நீ ,
சில சமயம் அவனுடனோடு
சுற்றிக் கொண்டிருப்பதும் ,
அவனைக் கணவன் என்று
சொல்வதும் சிரிப்பைத்தான் தருகிறது !!
நான் பயப்படவில்லை
அவன் நிழலோடு வாழ்க்கை நடத்தும் முட்டாள் !!

அவன் மட்டுமல்ல
இதை இல்யூஷன் என்று சொல்லும்
யாவரும் முட்டாள்


3 கருத்துகள்:

  1. The virtual touch of
    Daffodils fallen out
    Of the sandal breeze,

    The chillness of
    Scarcely raining
    Shower

    Brought me the
    the remembrance of
    Your kiss.

    பதிலளிநீக்கு
  2. இதற்கு என்னவென்று பின்னூட்டமிடுவது?

    பதிலளிநீக்கு
  3. இதயத்தை (உயிரின் ஆழம் வரை) ஊடுருவும் அற்புத வரிகள்..

    பதிலளிநீக்கு