ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

நினைவுகள்

மூளையைக் குத்திக் கிழிக்கும்
உன் நினைவுகள் மீண்டும் மீண்டும் 
வந்துப் போகின்றன .....

இமைகளின் கதவில்கூட 
என்னையும் மீறி 
உன் சித்திரம் தான் இருக்கிறது 
அழிக்கவே முடியாமல்.

என் அகச்செவியோ உன் குரலை 
மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறது,
அதில் முதன் முதலில் என் 
பெயர் சொன்ன உன் தொனி
மட்டும்  மாறாமல்.

பேசுகின்ற வார்த்தை இடுக்குகளில் 
வரும் மௌனக் காலங்களிலும் 
உன் பெயர் தான் பாராயணம்.

உண்ணும் உணவில் கூட 
உன் மயிர் தான் என் தேடல்.
வளர்க்கும் பூச்செடிக்கு கூட 
உன் வருகை பற்றி மட்டும் 
சொல்லி வருகிறேன்.

உன் பதில் வரும் வரை 
இது முற்று பெறாதக் கவிதை 

2 கருத்துகள்: