வெள்ளி, 23 டிசம்பர், 2011

காத்திருக்கும் காலங்கள்

என்றுமே நிகழாது  ............
எப்படியும் நிறைவேறாது ............
ஒரு போதும் இயலாது என்று தெரிந்தும்.......... 
அவள் -ஏதோ ஒரு 
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் பிறவாத குழந்தையாய், 
வாழ்ந்து முடித்த ஒரு ஆத்மாவாய்,
காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரேயொரு  கணமாய்,
வின்னாய், காற்றாய், வாசனையாய் இருக்கும் 
அவள் - ஏதோ ஒரு 
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

மனித வாடையை உணர முடியாத் 
காதல் கொண்டவள் - உருவத்தில் 
என் தாயின் சாயல் கொண்டவள்,
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

உடல் என்ற கவர்ச்சிக்கும் - அப்பாலே   
உள்ளம் என்ற உணர்வுக்கும் -மேலே 
 ஒரு எச்சமான உயிர்த்துடிப்புடன் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.


மொழியால் சொல்லாத உரையாடலில் 
கைகளால் கூடாத ஒரு தழுவலை 
எச்சில் படாத முத்தங்காளால் - பொழியும் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

என்பிறப்பினையே நின்று  பார்த்தவள்- என்
நிறத்தையும் அழகையும்- ஒருபோதும்
 பார்க்க விரும்பாத விரதம் கொண்ட 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளை ஊரே பழித்தபோதும்
 கொல்லச் சொல்லி கொன்றபோதும்
 தடுக்க முயலாத என் மவுனத்திலும் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

கருவிலேயே கலைக்கப்பட்ட - என் காதலி 
இன்னும் பிறவாமல், காத்திருக்கவும் முடியாமல் 
அவள் -ஏதோ ஒரு  
எல்லைக் கோட்டில் நின்று - என்னை 
அழைத்துக் கொண்டிருக்கிறாள்.

என் கல்லூரிக் காலங்களில் ஆண்டுமலருக்காக நான் எழுதிய சிறுகதையின் வேறு வடிவம் தான் இது .... (ஆண்டு மலரில் நிராகரிக்கப்பட்டது)
கரிகாலன் 

1 கருத்து:

  1. நல்ல கவிதை.
    இப்பொழுதுதான் படிக்க நேரம் கிடைத்தது.
    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு