செவ்வாய், 16 நவம்பர், 2010

ஒரு கதை முன்னோட்டம்

சாண்டில்யன்,கல்கி ஆகியோரின் பாதிப்பு இல்லாமல் என்னால் எழுத முடியாது என்றாலும்,இலக்கிய உலகுக்கு சுஜாதா எனும் சாளரம் இன்றி இன்றைய சாமானியர்கள் அவ்வளவு எளிதாக நுழைய முடியாது.எனினும் சரித்திரத்தின் மீதான ஆவல் எனக்கு கமலஹாசனிடம் இருந்து தான் தொடங்கியது.திரு.கமல் அவரின் ரசிகர்கள் கூட தேடலில் ஊறி இருப்பார்கள் என்று இப்ப்போது எனக்கு விளங்குகிறது.(நம்மவர் படத்தின் வரலாற்று ஆசிரியருக்கும் என் நன்றி)

இந்த மூன்று நபர்களின் தாக்கத்தால் உருவான என் எழுத்து ஓரளவுக்கு என் வட்டத்தில் உள்ளோர் தந்த உற்சாகத்திலும்,ஊக்கத்திலும் நான் இந்நாவலை எழுத முயற்சிக்க வைத்தது.கிட்ட தட்ட 20 ,25 சிறுகதைகள் எழுதி வைத்து அதன் மூலம் முகவரி கிடைக்கும் முன்னர் இந்த நாவல் எழுதும் ஆசை வந்ததன் காரணம்,இதன் காரணமாய் நான் வாசிக்க இருக்கும் நூல்களின் எண்ணிக்கை தான்.ஆம்,இது ஒரு சரித்திர நாவல்.

இப்போதைக்கு இந்நாவலை சிறு குறிப்பாகவும், சில விளக்கங்களுடன்(ஆசிரியர் தலையீட்டுடன் ) ஆரம்பிக்கறேன்.உங்களது ஊக்கத்துடன் விமர்சனம் தான் எனக்கு மிகவும் தேவை.

இந்நாவலின் நோக்கம்,
1 .பொதுவாக மக்களுக்கு தெரியாமல் போன ஒரு சிறிய கோயில்,ஏரி மற்றும் அந்த ஊருக்கு வந்தேறிய மக்களின் அடையாளத்தை இம்மண்ணிற்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.எனது நாவலின் தலைவன் ஒரு சேனைத் தளபதியோ,இல்லை ஒரு இளவரசனோ இல்லை, அவன் சாதாரண குடிமகன் .
2 .அது மட்டுமின்றி உலக அளவில் தமிழின் மதிப்பு உயர்ந்திருந்தாலும், தமிழ்நாட்டிலும்,ஈழ தேசத்திலும் தமிழனின் நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது.
எம்மொழி உணர்வை, அதன் சிறப்பை, எம்மக்களின் மாண்பை நான் சித்தரிப்பதை வைத்து,கடைக் கோடியில் வாழும் தமிழன் கூட தமிழ் உணர்வில் எப்படி இருப்பான் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்.

மேலும் உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்,சரித்திரத்தை கரைத்து குடித்தவன் அல்ல நான். ஆகவே ஒரு வரலாற்று உண்மையினைச் சார்ந்து தான் இக்கதை ஓட்டம் சென்று கொண்டிருக்கும் ..இந்த அடிப்படை உண்மையிலேயே ஒரு சர்ச்சை இருப்பதால் ,ஒருவேளை எழுதும் போதே கதைக்களத்தினை மாற்றிஎழுதும் சூழல் ஏற்படலாம்.(ஹி ஹி... ஏனெனில், இது தான் என் முதல் நாவல் )

(இந்நாவலை முடித்தவுடன் உடனடியாக நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பேன் )

நன்றி:
சோழ தேசத்தை பற்றிய தகவல்களுக்கு எனது தோழன் ரமேஷுக்கும், கதை நடக்கும் களமான சேர தேசத்தை பற்றி களப் பனி செய்து தகவல்களை கொடுத்துவரும் என் கல்லூரித் தோழன் திரு.அருண்குமார் நாட்டாமை அவர்களுக்கும் என் நன்றி.என் வலைப்பதிவை பார்த்து வரும் உங்களுக்கும் என் நன்றி

சமர்ப்பணம்:
அழிந்து கொண்டிருக்கும் எம்மின மக்களின் கண்ணீருக்கும், வேதனைக்கும் இந்த புதினம்  மூலம் கிடைக்கும் நற்பெயரையும்,பாராட்டையும் சமர்பிக்கிறேன்.

நன்றி

இப்படிக்கு
கரி_காளி 


கதை :
தலைப்பு :   "வீர நாயக்கன்  "



















3 கருத்துகள்:

  1. வீர நாயக்கனுக்காக காத்திருக்கிறோம்! பதிப்பை "Global audience" ற்காக ஆங்கிலத்தில் வெளியிடுங்கள்;
    ஆனால், எங்களுக்காக தமிழிலும் வெளியிடுங்கள்! :)

    பதிலளிநீக்கு
  2. thamizhil thaan enakku ezhutha therium, ungalaip ponrorin alosanayin pinnar thaan aangilathil pathippen.. nichayamaaga ungal uthavi enakku kidaikkum enru nambugiren

    பதிலளிநீக்கு
  3. from where you get Arun Kumar in this part.
    any how wish you all success.
    The things which are been expected by me but unable to do. In case my presence needed you can utilize me.

    பதிலளிநீக்கு