சனி, 20 நவம்பர், 2010

வீர நாயக்கன் - பகுதி 1

 கதை முன்னோட்டம்





 13 -ஆம் நூற்றாண்டின் பாதியில் இக்கதை ஆரம்பிக்கிறது.....................


பகுதி -1 குளக்கரையில் ஒரு ஆபத்து

நித்திரைக்கு செல்ல வேகமாக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான் கதிரவன்.பறவை எழுப்பும் சத்தம் தவிர அந்த ரம்மியமான சூழலை கெடுப்பதற்கு அவ்வேளையில் பொதுவாக யாரும் வருவதில்லை.ஆனால், அன்று மட்டும் அந்த வறண்ட காட்டுப் பகுதியில் சிறிது பதட்டம் நிலவிக் கொண்டிருந்தது.ஆம்பிராவதி நதியிலிருந்து 30 காத தொலைவில் உள்ள சிறிதும் அடர்த்தியற்ற ஆனால் ஆபத்தான அந்த காடு, அப்பொழுது அசாதரணமான தோற்றம் கொண்டிருந்தது.

அங்கிருந்த ஒரு குளக்கரைக்கு குளிக்க சென்ற சிலர் எதையோ விரட்டிக் கொண்டு வந்தனர்.கையில் அம்புடனும், வேலுடனும் மூன்று வாலிபர்களும் ஒரே ஒரு வேலினை ஏந்திக் கொண்டு ஒரு தோற்றத்தில் மிக சாதரணமான(இளைத்த தேகத்துடன்) ஒரு இளைஞனும் யாரையோ தாக்க ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு முன்னாலே அந்த குளத்தில் தாகம் தணிக்கச் சென்ற ஒரு புலி.ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டு, அந்நால்வரில் யார் நமக்கு முதல் விருந்து என்று நோட்டம் விட்டபடி உறுமிக் கொண்டிருந்தது.நால்வரும் வேடர்களாக இருந்தாலும்,பொழுது சாய்ந்த களைப்பிலும்,எதிர்பாராத இந்த சந்திப்பிலும்(புலியுடன்) சற்று பதட்டமடைந்து இருந்தனர்.எனினும், பொம்மன் எனும் வேடன் ஒருவன் கையிலிருந்த அந்த வில்லிலிருந்து ஒரு அம்பு நேராக புலியின் காலில் ஒன்றினை பதம் பார்த்தது.

கழுத்துக்கு வைத்த குறி காலில் பட்டதில், கொஞ்சம் நிதானம் தவறினான்,மறுபடியும் சுதாரிப்பதற்குள் அவன் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்தது அப்புலி.இந்த தாக்குதலை யாரும் எதிர்பார்க்காத போதிலும் கையில் வேல் மட்டும் ஏந்திய அந்த இளைஞன் புலியின் இடுப்பில் தன் வேலினால் குத்தினான்.சட்டென்று புலி அவனை நோக்கித் திரும்பியது.அவன் சுதாரித்துக் கொண்டு பாய்வதற்கு வந்த புலியிடம் லாவகமாக தப்பி அந்த குளக்கரை மேட்டில் ஓட்டம் பிடித்தான்.

அந்த புலியோ அம்மூவரையும் விட்டு விட்டு ,ஓட்டமெடுத்த அந்த இளைஞனைத் துரத்தியது.அம்முவரும் புலியின் பின்னரே தொடர்ந்து வந்து அம்பேய்தினாலும் அங்கங்கு காயப்படுதியவாறு உராய்ந்துச் சென்றதே தவிர அதன் துரத்தலை நிறுத்தவில்லை. ஆனால் அந்த வேட இளைஞனோ குளக்கரையின் சரிவான பகுதிகளில் புயலென ஓடினான்.அச் சரிவில் புலியினால் சரியாக காலினை ஊன்ற முடியவில்லை.

அவர்களுக்கு இடையே இருந்த தூரம் அதிகரிக்க, அங்கு அருகில் இருந்த ஒரு குன்றின் பாறையை பிடித்து தாவி ஏறினான்.துரத்தி வந்த அந்த புலியினைக் காணவில்லை, எண்ணெயில் தெறிக்கும் கடுகு போல் படபடத்துக் கொண்டிருந்த அவன் இதயத் துடிப்பு அப்பொழுதும் அடங்கவில்லை.சட்டென்று,வேகமாக அச்சிறிய குன்றின் உச்சியில் ஏறி, புலி எங்கு சென்றது என்று நோட்டம் விட்டான்.அவனுடன் வந்த மூவரும் பாறையில் நின்றவனைக் கண்டு நிம்மதியுடன் அவனை நோக்கி விரைந்தனர்

"ஏலே!! வீரா.. சரிதாம் ...புலியை விட உனக்கு சடுதியா ஓடத் தெரியும்னு நிருபிச்சிட்ட,, கீழ இறங்கி வா, ராவோட ஊருக்குள்ள போவம் " என்றவாறே அவன் தோழனான பொம்மன் அவனிடம்  சொல்லிக் கொண்டே அக்குன்றருகே சென்றான்.கொஞ்சம் நிதானத்துக்கு வந்த வீரனின் நம்பிக்கையை குலைக்கும் வகையில், பொம்மன் மறுபடியும் கத்தினான்."வீரா !!! புலி உமக்கு பின்னால நிக்குதுலே !! குதிச்சு வந்துடு !!! பெருமாளே...நீ தான் காப்பத்தொனும் "என்று உரக்க அலறினான்.

"எங்கப்பா ஆஆ "என்றவாறே திரும்பிக் கூட பார்க்காமல் அப்பாறையில் இருந்து வீரனும் குதிக்க,அவன் மேலேயே அப்புலியும் குதித்தது.40 அடி உயரத்திலிருந்து தொப்பென விழும் சத்தம் அம்மூவரின் நெஞ்சிலும் ஊசி இறங்குவது போல் இருந்தது.கண்களை திறத்து பார்க்கும் போது, கால் பங்கு உயிருடன்,கழுத்தில் வேலுடனும் உடம்பெல்லாம் குருதியுடனும் உறுமிக்கொண்டே இருந்தது அப்புலி.

வீரனோ,அப்பாறையில் இருந்த ஒரு இடுக்கில் ஒரே கையினை பிடித்து தொங்கியவாறே அந்த புலியை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.எல்லோரும் அதிசயமாக அவ்வீரனை பார்த்துக் கொண்டிருந்தனர்."எப்பே !! நீ நெசமாலும் வீரன்தான்" என்று சிரித்தவாறே பொம்மன் அவனை பார்த்து சொல்ல.

வீரன் "உன்னை கொல்ல வந்த புலியை தான நான் குத்த,அது என்னை துரத்தியது..தொங்கிகிட்டு இருக்கிற என்னை தூக்கிவிடுரிகளா, இல்லை அந்த பாவப் பட்ட புலியோட நானும் போய்ச் சேரட்டுமா" என்றான்". கிடுகிடுவென அப்பாறை மீது ஏறி அவனை காப்பாற்றியவாறே,"ஏ வீரா!! அந்த புலிய ஒரே போடுல கொன்னுட்டு பரிதாபமா படுற ?? ஏய் !நீ சாதிச்சிட்ட டோய்! " என்றான் பொம்மன்.

"உசிரு மேல உள்ள பயம் டா! இனி என்னை எவனும் குறை கூறி சிரிக்க மாட்டிங்களே??!"என்றவாறே தன் மீது இருந்த சிராய்ப்புகளில் எச்சிலை தடவிக் கொண்டு அந்த புலியை நோக்கினான்.

இந்த புலி வேட்டையில் இருந்து தான் அவ்வூருக்கு ஆரம்பித்தது ஒரு மிகப்பெரிய மாற்றம்..அங்கு ஆட்சிசெய்து வந்த மன்னனுக்கும் அவ்வூரிலேயே ஒரு தலைவலி ஆரம்பித்தது. ஒரு சாதாரண குடிமகனுக்கு  நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் காலமும் நெருங்கி வந்தது.எல்லாம் அந்த சேரநாட்டின் சிறு கிராமமான வெள்ளியனை எனும் ஊரில் தான்.வெள்ளியனை எனும் சிற்றூர் சேர நாட்டில்,ஆம்பிராவதி ஆற்றில் இருந்து சுமார் 30௦ காத தூரம் தெற்க்கே செல்லும் காட்டு பகுதியின் தொடக்கத்தில் உள்ளது.அவ்வூர் முழுதுமாக நிர்மாணிக்கப் படவில்லை சில ரகசியக் காரணங்களுக்காக அங்கிருக்கும் காட்டு பகுதியில் அவ்வூர் நிர்மாணிக்கப் பட்டுவந்தது.இந்த சிற்றூர் பல அரசியல் முடிச்சுகளின் கூடாரமாய் அப்போது இருந்தது.

இந்நிலையில் அவ்வூரின் கிழக்கு பகுதியில் உள்ள கோயிலை ஒட்டிய குடியிருப்பில், எந்த பாவமும் தெரியாத ஒரு பூவை ஒருத்தியை நாம் காணப் போகிறோம், அவள்  கோதை என்ற பெயர் கொண்ட பேதை ஒருத்தி - அப்பொழுது பூக்களை தோரனமாக்கி கொண்டிருந்தாள்.யாருக்குத் தெரியும்? தான் நித்தம் தொழும் தன் தெய்வமான பெருமாள் ஒரு பெருஞ்சோதனையினை தனக்கு தருவார் என்று தெரியாமல், அப்பெருமானுக்கு மாலையை தொடுத்துக் கொண்டிருந்தாள்.




தொடரும்
கரி-காளி.

(உங்கள் விமர்சங்கள் வரவேற்க்கப்படுகின்றன )

7 கருத்துகள்:

  1. Excellent Introduction.

    But could not be conclude why it was been diverted.

    Awaiting for the next episode

    பதிலளிநீக்கு
  2. வீர நாயக்கனை உருவாக்கி கொண்டிருக்கும் வீரப் பிள்ளைக்கு என்னுடைய வீர வணக்கம்,

    ஆலோசனை:
    வித்தியாசமான கதைக் களம்.அடுத்த பதிவில் என் ஆலோசனை உண்டு.

    பதிலளிநீக்கு
  3. Wow !!! Interesting introduction and nice writing style. Great :)
    Don't stop

    பதிலளிநீக்கு
  4. Wow !!! Interesting introduction and nice writing style. Great :)
    Don't stop

    பதிலளிநீக்கு
  5. Fantastically awesomely excitingly written. Avan puliku bayanthu odumbothu iruntha antha paraparappu padikumbothe varuthu. Dass continue the thrill writing style. Nayakkanin adutha varavukaga waiting..

    பதிலளிநீக்கு